உலக சமுத்திர தினத்தன்று நடைபெற்ற வட்ட மேசை கலந்துரையாடல் மற்றும் சதுப்புநில நர்சரிக்கான திறவு பற்றிய வெளிப்பாடு

June 17, 2020

[தொனிப்பொருள் - நீல பொருளாதாரத்திற்கான புத்தாக்க நடைமுறையை கொண்ட சமுத்திர வளங்களினுடைய நிலைத்திரு பயன்பாடுகள் ]  


[ஜூன் 08,2020] உலக சமுத்திர தினத்தை கொண்டாடும் முகமாக SLYCAN Trust இன் ஒத்துழைப்புடன் இலங்கையின் சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் வளங்கள் அமைச்சு மற்றும் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வாக வட்ட  மேசை கலந்துரையாடல் மற்றும் சதுப்புநில நர்சரிக்கான ( Mangrove Nursery ) திறவு ஒன்றும் களுத்துறையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வானது கடல் வளங்களின்  நிலையான பயன்பாடு என்பது “கடல் சார்ந்த பொருளாதார நிலையில் ஒரு புத்தாக்கத்தினூடாக பிறப்பிக்கப்பட வேண்டும்” என்ற கருத்திற்கு அமைவாக அமைய பெற்றது.  அவ்வகையில் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட ஓர் சதுப்பு நில வள மையம் உலக சமுத்திரத்தினத்தை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் சதுப்புநில நர்சரி நடுகை திட்டமும்  காலை 7.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது .  கடல் சார்ந்த தாவரங்களினுடைய பாதுகாப்பு மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்பவற்றை கருத்தில் கொண்டும் இவ் சமுத்திர பெரும் பிரதேசத்த்தில் முதன்மை வகிக்கும் ஓர் அங்கமாக இவ் சதுப்புநில தாவரங்கள் அமைகின்றது என்பது முக்கியமானது.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வட்டமேசை கலந்துரையாடலில் இலங்கையில் கடல் சார் வளங்களை பாதுகாப்பதில் பிரதிநித்துவப்படுத்தும் அரச அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் போன்றவற்றின் பங்குபற்றலுடன் இவ் நிகழ்வு ஆரம்பனானது. இலங்கையில் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் பணியாற்றும் பல முக்கிய பங்குதாரர்கள இங்கு அடையாளம் காணப்பட்டனர்.

கடலோர சுற்றுசூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி ஓர் விழிப்புணர்வு விளக்க காட்சியுடன்  ஆரம்பிக்கப்பட்ட இவ் நிகழ்வில் வரவேற்புரையை கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர்  Ms. Dharshani Lahandapura( Chairperson , MEPA)  என்பவரால் நிகழ்த்தப்பட்டது. அவர் மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இவ் சமுத்திரத்தினத்தில் கவனம் செலுத்துதல் என்ன என்பது தொடர்பில் " Blue Carbon Economy “என்ற ஒரு நிலையான அபிவிருத்தியை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.  

இதனை  தொடர்ந்து உரையாற்றிய இலங்கையின் சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சின் செயலாளர்  Mr. Sarath Wijesinghe ( Secretary , Ministry of Environment and Wildlife  Resources)  கூறுகையில் இவ் உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு அமையப்பெற்ற இவ் வட்ட மேசை கலந்துரையாடலில் அதிகம் கவனம் செலுத்தப்படும் துறைகளாக நிலைத்திரு சுற்றுலா அபிவிருத்தி , நிலைத்திரு மீன்பிடி அபிவிருத்தி , சமுத்திர அடிப்படையிலான புதுப்பிக்க தக்க ஆற்றல் மேம்பாடு மற்றும் துறைமுகத்துடன் தொடர்பான நிலைத்திரு அபிவிருத்தி என்பன முதன்மை வகிக்கின்றன என்றும் கடல் சார் வளங்களின் அருகிச்செல்லல் தொடர்பில் அதனை மேம்படுத்த எத்தகைய புத்தாக்க அளவீடுகளை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவரது உரையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.  மேலும் மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சமூக ஊடகங்களின் பிரச்சாரம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான " உயிர் வாழும் சமுத்திரம், எமது எதிர்காலம் " என்ற கருப்பொருளிற்கு அமைவாக ஓவிய போட்டி முன்னெடுக்க பட்டத்தையும் இவ்விடத்தில் தெரிவித்திருந்தார். இது பாடசாலையினுடாக மாணவர்கள் மத்தியில் கடல் சார் வளங்களின் பெறுமதியை உணர வைக்கும் என்பது மிகவும் பொருத்தமானதாகும். 

உலக சமுத்திர தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் பற்றிய கருத்துக்களில் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர்   Dr. Terney Pradeep Kumara ( General Manager , MEPA ) விபரிக்கையில் சமுத்திரம் என்பது எவ்வகையான நன்மைகளை செய்து கொண்டிருக்குகின்றது ? ஆனால் இன்றைய நிலையில் கடல் சார் வளங்கள், கடல் நிலப்பரப்புகள் கொண்டிருக்கும் அச்சுறுத்தல்கள் மானுடவியல் மூலம் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது. வளங்களின் பயன்பாடு என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம்  வாய்ந்தது  என்பதையும் அவர் முன்னிலை படுத்தியிருந்தார். மேலும் பல தரவுகளின் மூலம் சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய போது சமுத்திரம் என்பது பெரிய பரப்பினை உள்ளடக்கியிருக்கின்ற நிலையில் 50 - 80 வீதம் ஆன ஒட்சிசன் அங்கிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. நாம் இன்றைய நிலையில் கடல் சார் வளங்களை பாதுகாப்பதிலும் நடைமுறை படுத்துவதிலும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்,  2017 இல் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் 98 கிலோமீட்டருக்கு 36000 கிலோகிராம் கழிவுகள் ஒரு கிழமையில் நுகரப்பட்டுள்ளன . அங்கே  கூடுதலாக பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளே காணப்பட்டன. அதேவேளையில் எதிர்காலத்தின் போக்கு என்பது  கடல் சார் பரப்பில் கேள்விக்குறியானது என்றும் அதன் மீது ஒவ்வொருவரும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என திடப்படுத்தியிருந்தார் .   

கடல் சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வளர்ச்சி மற்றும் நீல பொருளாதாரத்திற்கான ( Blue Economy )  சேர்க்கை குறித்து இலங்கை நிலையான எரிசக்தி ஆணையத்தின் தலைவர் ரஞ்சித் செபாலா கூறுகையில் அதிகாரசபையின் பணியின் ஒரு பகுதியாக இயற்கை வளங்களை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்வது, எரிசக்தி மேம்பாட்டு பகுதிகளை வெளியிடுவது மற்றும் எரிசக்தியை செயல்படுத்துதல் ஆகியவை அதன் நோக்கத்தில் உள்ளன என்பதை வெளிப்படுத்தியிருந்தார். திறமையான நடவடிக்கைகள். அலை ஆற்றல் ஜெனரேட்டர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்கு முன்னோக்கி செல்லும் வழி என்றும்  செபாலா குறிப்பிட்டார்; திருகோணமலை மற்றும் பல்கலைக்கழகங்களில் கடல் வெப்ப ஜெனரேட்டர்கள் வைத்திருப்பது புதுமையான தொழில்நுட்பத்தின் பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நிலைத்தன்மையை ஆய்வு செய்ய அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். 

மேலும் SLYCAN Trust இன் நிர்வாக இயக்குனர் Ms. Vositha Wijenayaka (Executive Director ) தனது கருத்தை பிரதிநிதித்துவ சதுப்புநில கண்டல் தாவரங்கள் அவ் பிரதேச மக்களுக்கு வாழ்வாதார அடிப்படையில் எத்தகைய பங்களிப்புகளை வழங்குகின்றது எனவும் அவை தொடர்பில் SLYCAN ஆல் முன்னெடுக்கப்படும் செயற்திட்டமான “ Ecosystem and Biodiversity Conservation “ இன் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற  சதுப்புநில மறு சீரமைப்பு, வாழ்வாதார மேம்பாடு , கழிவு முகாமைத்துவம் பற்றிய செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தினார். மேலும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு இளைஞர்களினுடைய பங்களிப்பு பற்றிய கருத்தில் அவர்களையும் இவ்வாறான செயற்திட்டங்களில் ஈடுபடுத்தல் அவசியம் எனவும் எமது செயற்திட்டத்தில் பாடசாலை மாணவர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட முன்னுரிமைகளையும் அவர் சுட்டிகாட்டியிருந்தார். இது அடுத்த தலைமுறையினரை சுற்று சூழலியல் துறையில் கவனம் செலுத்தும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும் கடல்சார் வளங்களை பேணி பாதுகாப்பதில் குறிப்பாக சதுப்புநில தாவரங்களை பாதுகாப்பது குறித்த கொள்கைகள் தொடர்பிலான ஆராய்ச்சிகளையும் எங்களுடைய குழு மேற்கொண்டு வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடலை அடிப்படையாகக் கொண்ட நீல பொருளாதாரம் மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த அறிவு சார்ந்த வளர்ச்சி என்ற தலைப்பில் விரிவுபடுத்திய ருஹுனா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவா அமரசேனா தனது கருத்தை முன்வைக்கையில் வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனம் மீன்வளம், உயிரியல் மற்றும் மீன்வளர்ப்பு, கடலோர சூழல் குறித்த குறிப்பிட்ட தகவல்களையும் படிப்புகளையும் வழங்கியது. , பல நாடுகளுடன் ஒத்துழைப்பு மூலம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலிருந்து “ சுற்றுச்சூழல் வேதியியல்,  மீனவர்களுக்கான மீன்பிடி முறைகள் மற்றும் தரவுகளை வழங்குவதற்கும், அவர்களின் மீன் பிடிப்புகளின் செயல்திறனை அதிகரிப்பதற்கான சிறந்த மீன்பிடி இடங்களை அவர்களின் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் வழங்குவதற்கும் பல்கலைக்கழகம் உண்மையில் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

நாட்டின் தூய்மையான சுற்றாடல்  தொடர்பிலான கொள்கைகள்  மற்றும் அரச திட்டங்களில்  முதன்மை வகிக்கும்  மத்திய சுற்றாடல் அதிகார சபை  (CEA)  சார்பில் தமது கருத்தை பிரதிநித்துவ படுத்தும் போது , மிஸ்டர்  டிமல் பெர்னாண்டோ, அபிவிருத்தித் திட்டம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தனியார் மற்றும் அரசு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதிகாரம் ஒப்புதல் அளித்ததாக விளக்கினார். செயல்முறையின் தொடக்கத்திலிருந்து அகற்றும் வரை கழிவுகளை வெளியேற்றுவதை நிர்வகிக்க ஒரு அட்டவணை அடிப்படையிலான மேலாண்மை உரிமத்தை வழங்க முடியும் என்று அவர் கூறினார். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பொறுத்து தலையீடு/செயல்பாடுகளின் நிலை கட்டுப்படுத்தப்படும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதிகள் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய இணக்க கண்காணிப்பு அமைப்புகளுக்கான பிந்தைய கண்காணிப்பின் பற்றாக்குறை உள்ளது எனவும் அதன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

எதிர்கால கடல் சார்ந்த பொருளாதாரத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தேவை குறித்து பேசிய தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை (NARA), மீன்பிடி தரை முன்கணிப்புக்கு செயற்கைக்கோள் நிகழ்நேர தரவுகளை வைத்திருக்கும் பொறுப்பான நிறுவனமாக NARA விளங்குகின்றது எனவும் , கடல் உயிரினங்கள் குறித்து, குறிப்பாக ஆக்கிரமிக்கப்படும் கடல் உயிர் இனங்கள் குறித்து கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும், நீல கார்பன் மற்றும் கார்பன் சிதைவின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.  குறிப்பாக சதுப்புநில தாவரங்களின் பாதுகாப்பு, அலை ஆற்றல் போன்ற நிலையான ஆற்றலின் முக்கியத்துவம், மாசுபாடு, கடல் துறை மருத்துவம் மற்றும் கடல் படுக்கை பேரழிவுகள் ஆகியவற்றிலிருந்து மீன்வளத்தின் தாக்கங்கள் எவ்வாறு தரையில் ஏற்கனவே நடப்பதை விட அதிகமாக ஆராயப்பட வேண்டும் என்பதையும் NARA விவாதத்திற்கு கொண்டு வந்தது.

மேல் மாகாண காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் “ஜெனரல் தேஷாபண்டு தென்னகூன்” தனது விளக்கக்காட்சியில் அணிதிரட்டப்பட்ட பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் குறித்த ஆர்வத்தை உருவாக்க “உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு திட்டங்கள் குறித்து ஒரு சுருக்கத்தை வழங்கினார். மேலும், குப்பை சேகரிப்பு மற்றும் துப்புரவுகளை மேற்பார்வையிடுவதன் மூலம் நகராட்சிகளுக்கு உதவுவதில் காவல்துறையின் பங்கு குறித்தும், கழிவுகளை அகற்ற அரசாங்கத்திற்கு உதவுவதில் அவர்களின் பங்கு குறித்தும் விளக்கினார்

அங்கே பிரதிநிதித்துவம் கொண்டிருந்த ஏனைய வழங்குநர்களின் தரவுகளின்படி, சாலைகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் கடல்களில் திடக் கழிவுகளை அகற்றுவது 40% எனவும்  கடலோர மாசுபாட்டிற்கு பங்களிக்கும் திடக்கழிவு கலவை உள்நாட்டில் உருவாகும் கடல் சார்ந்த குப்பைகளில் 95% ஆகும். இதில், கிட்டத்தட்ட 98% பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சேகரிக்கும் திடக்கழிவுகளின் மொத்த அளவு 60% ஆகும். இது குறிப்பாக மீன்வளத் துறையால் ஏற்படும் மாசுபாட்டை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை, குறிப்பாக உலர் மீன் பதப்படுத்தும் தொழிலால் ஏற்படும் கழிவுநீரை வெளியேற்றுவது மற்றும் வணிக மற்றும் மீன்வள துறைமுகங்களால் ஏற்படும் மாசுபாடு என்பவையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.


 இந்த வட்ட மேசை கலந்துரையாடல் மூலம் சுற்றுச்சூழல் கொள்கை, கடல் சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வளர்ச்சி மற்றும் நீல பொருளாதாரத்திற்கான சேர்க்கை, கடலோர மற்றும் கடல் தொடர்பான சுற்றுலா வாய்ப்புகள், கடலோர மற்றும் கடல் மீன்வளர்ப்பு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், கடலோர துறை வளர்ச்சி, நிலையான புதுமையான நடவடிக்கைகள், புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்  தொடர்பிலான தரவுகள் மற்றும் நேரடி தகவல்கள் மூலமாக வெளிக்கொணஒனற படத்துடன் எதிர்கால நடவடிக்கை குறித்து இவ் துறையில் முக்கியம் பெரும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனக்களினுடைய பங்களிப்பும் வெளிக்கொணரப்பட்டது.


Related Articles

No items found.

Thematic Areas

No items found.

Tags

No items found.
About the Author
SLYCAN Trust

SLYCAN Trust is a non-profit think tank. It has been a registered legal entity in the form of a trust since 2016, and a guarantee limited company since 2019. The entities focus on the thematic areas of climate change, adaptation and resilience, sustainable development, environmental conservation and restoration, social justice, and animal welfare. SLYCAN Trust’s activities include legal and policy research, education and awareness creation, capacity building and training, and implementation of ground level action. SLYCAN Trust aims to facilitate and contribute to multi-stakeholder driven, inclusive and participatory actions for a sustainable and resilient future for all.